மகள் யாருக்கு?-கும்ப்ளே மனைவி மனு வாபஸ்
அனில் கும்ப்ளேவின் மனைவி சேத்னா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவரது முதல் கணவர் பெயர் குமார் ஜாகிர்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உண்டு.
கடந்த 2004ம் ஆண்டு மகளை சேத்னா கும்ப்ளே வளர்த்து வர வேண்டும். தனது மகளை விரும்பியபோது பார்க்க ஜாகிர்தாருக்கு உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில் பெங்களூர் குடும்ப கோர்ட்டை அணுகிய குமார் ஜாகிர்தார், தனக்கு மறு திருமணம் ஆகி விட்டதாகவும், தனது இப்போதைய குடும்பச் சூழல் பெண் குழந்தையைப் பார்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு தகுதி உடையதாக மாறியுள்ளதால், மகளை தன் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு செய்தார்.
இதை எதிர்த்து சேத்னா உயர்நீதிமன்றத்தையும், பின்னர் உச்சநீதிமன்றத்தையும் அணுகினார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் குமாருடன் பேசித் தீர்வு காணுமாறு சேத்னாவுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று தனது மனுவை திரும்பப் பெற்றார் சேத்னா.
தற்போது பெங்களூர் குடும்ப கோர்ட்டே இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்கவுள்ளது.