நிலம் ஒதுக்குவதில் அரசு தாமதம்: லேலண்ட் - நிஸ்ஸான் வாகன உற்பத்தி தாமதம்!
இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் மற்றும் ஜப்பானின் நிஸ்ஸான் நிறுவனங்கள் கூட்டாக லேசு ரக ட்ரக்குகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன.
ரூ.2,300 கோடியில் அமையவுள்ள இந்த திட்டத்துக்காக மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன இவ்விரு நிறுவனங்கள். ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் எனும் இடத்தில் புதிய தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இது வரை அங்கு தொழிற்சாலைக்கான நிலத்தை தமிழக அரசு ஒதுக்கவில்லை.
இதனால் இந்த ஆண்டு அறிமுகமாகவிருந்த புதிய வாகனங்கள் அடுத்த ஆண்டுதான் விற்பனைக்கு வரும் என்றும், இவை அனைத்தும் தற்போதுள்ள அசோக் லேலண்டின் சென்னை மற்றும் ஒசூர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் என்றும் சேஷசாயி கூறினார்.
முதல்கட்டமாக 50000 முதல் 70000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். 1.25 டன் மற்றும் 2 டன்கள் திறன் கொண்ட இரு வித ட்ரக்குகளை லேலண்ட் - நிஸ்ஸான் கூட்டு நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.