For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமரியில் 2 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றி காய்ச்சல் நோய் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 ஆயிரத்து 967 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக பிரேசிலில் 584, அமெரிக்காவில் 556, அர்ஜென்டினாவில் 465 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 99 ஆக இருக்கிறது. அதிக உயிர்களை பலி கொடுத்த நாடுகள் வரிசையில் இந்தியா 8வது இடத்தை பிடித்துள்ளது.

தற்போது குமரி மாவட்டத்தில் மேலும் இருவர் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுசீந்திரம், நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த முத்தம்மாள், வடசேரியை சேர்ந்த ஆல்வின் என்ற அந்த இருவரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

23 பேருக்கு இல்லை...

சமீபத்தில் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகளுடன் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 23 பேருக்கும் பன்றி காய்ச்சல் இல்லை என்பது சோதனைகளின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X