மேடாஸ் பங்குகள் விலை கிடுகிடு உயர்வு!
மும்பை: மேடாஸ் இன்ப்ரா நிறுவனத்தின் புதிய புரமோட்டராக ஐஎல்எப்எஸ் நுழைந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.
செவ்வாய்க்கிழமை காலையிலேயே இதன் பங்குகள் 5 சதவிகிதம் வரை உயர்வு கண்டன. சிறிது நேரத்திலேலே அப்பர் சர்க்யூட்டை எட்டியது. எட்டாவது முறையாக இந்த அளவு உயர்வு கண்டுள்ளது. தொடர்ந்து மூன்று தினங்களாக இதன் பங்குகள் நல்ல உயர்வு கண்டுள்ளன. ஆனால் ஐஎல்எப்எஸ் பங்குகள் 3 சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளன.
ஆகஸ்ட் 20-ம் தேதியிலிருந்து 39 சதவிகித உயர்வைக் கண்டுள்ளது மேடாஸ். சத்யம் நிறுவனம் வீழ்ந்த பிறகு, அதன் துணை நிறுவனமாகத் திகழ்ந்த மேடாஸ், இப்போது ராமலிங்க ராஜுவின் மகன்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ரூ.99 கோடி லாபம் கண்ட இந்த கட்டுமான, உள்கட்டமைப்பு நிறுவனம் இந்த ஆண்டு 490 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.