For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 5 தேசிய விருதுகள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: முன்னணி தேசிய வங்கிகளுள் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு (PNB) 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

சிறு, குறுந்தொழில் மேம்பாட்டுக்கு உறுதுணையாக விளங்கும் வங்கிகளைக் கௌரவிக்கும் வகையில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விருதுகளை வழங்கினார்.

பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் (பிஎம்இஆர்ஜிபி) கீழ் அதிக அளவில் கடன் வழங்கிய வங்கிகளில் முதலாவதாக பிஎன்பி தேர்வு செய்யப்பட்டது. வடக்கு மண்டலத்தில் முதல் பரிசையும் மத்திய மண்டலத்தில் 2-ம் பரிசையும் இவ்வங்கி பெற்றுள்ளது.

காதி கிராம கைத்தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இத்தொழில்களுக்கு அதிக கடன் வழங்கியமைக்காக 3 விருதுகள் பிஎன்பி-க்கு அளிக்கப்பட்டன. தேசிய அளவிலும், வடக்கு மற்றும் மத்திய மண்டலம் சார்பில் தலா ஒரு விருதுகள் வங்கிக்கு கிடைத்தன.

வங்கியின் செயல் இயக்குநர்கள் மோகன் வி. தங்ஸ்லே, நாகேஷ் பிடா, பொதுமேலாளர் ஜகத் ராம் ஆகியோர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X