இந்தியா - நமீபியா சிவில் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்து
டெல்லி: இந்தியாவும், நமீபியாவும் சிவில் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதுதவிர இரு நாடுகளுக்கும் இடையே மேலும் நான்கு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
நமீபிய அதிபர் ஹிபிகெபுன்யே பொஹம்பா இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட ஐந்து ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
நமீபியாவில் பெருமளவில் யுரேனியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அணு சக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள நாடுகள் வரிசையி்ல ஐந்தாவது நாடாக நமீபியா இணைந்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளுடன் இந்தியா சிவில் அணு சக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
நமீபியாவுடன் ஏற்பட்டு்ள ஒப்பந்தத்தின் கீழ் யுரேனிய வர்த்தகம், அணு உலைகளை அமைப்பது தொடர்பான வடிவமைப்பு பரிமாற்றம், பயிற்சி உள்ளிட்டவற்றை இரு நாடுகளும் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.