இந்திய அணுசக்தி மையங்களை தகர்க்க பெனாசிர் திட்டமிட்டார் - மாஜி ராணுவத் தளபதி
இதுகுறித்து பாகிஸ்தான் தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி...
1990ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கூட்டு சதி நடப்பதாகவும், இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்து பாகிஸ்தானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அந்த சமயத்தில் பெனாசிர் மிகவும் உறுதியுடன் செயல்பட்டார். இந்தியா நம்மை தாக்கினால் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி, இந்திய அணு சக்தி மையங்களைத் தகர்க்கத் தயார் நிலையில் இருக்குமாறு விமானப்படையை அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
பெனாசிரைக் கவிழ்க்க முயன்ற சவூதி...
பெனாசிர் பூட்டோவின் ஆட்சியைக் கவிழ்க்க சவூதி அரேபியாவைச் சேர்ந்த பலரும் முயன்றனர். இதற்காக அமைக்கப்பட்ட இஸ்லாமி ஜமூரி இத்தீஹாத் என்ற அமைப்பில் சேருமாறு பாகிஸ்தான் அரசியல்வாதிகளை அந்த அமைப்பைச் சேர்ந்த மஹமூத் ஹாரூன் கேட்டுக் கொண்டார். அவருக்கு சவூதியிலிருந்து பெருமளவில் பணமும் அனுப்பப்பட்டது.
பெனாசிர் மீண்டும் அரசியல் பலம் பெற்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர் என்று கூறியுள்ளார் பேக்.
பின்லேடன் செய்த சதி...
முன்னதாக 1998ம் ஆண்டு பெனாசிர் ஆட்சியைக் கவிழ்க்க பின் லேடன் மிகப் பெரிய அளவில் சதி வேலைகளில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் பெடரல் புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநர் மாலிக் மும்தாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக ஐஎஸ்ஐக்கு அல் கொய்தா இயக்கம் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்ததாம். இந்த சதி வேலையில், நவாஸ் ஷெரீப், முன்னாள் ஐ.எஸ்.ஐ. தலைவர் அசாத் துரானி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளான இம்தியாஸ், அமீர் ஆகியோருடன் இணைந்து ஐ.எஸ்.ஐ பெரும் சதித் திட்டத்தை தீட்டியது என்று கூறியுள்ளார் மும்தாஜ்.
பின்லேடனின் நேரடி மேற்பார்வையில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டதாம்.