ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் நன்றாகவே இருந்தது -டிஜிசிஏ
ராஜசேகர ரெட்டி இன்று பயணித்த ஹெலிகாப்டர் பெல் 430 ரக ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டர் பறக்கவே தகுதியற்ற நிலையில் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக இதன் பயணத் தன்மை குறித்த சான்றிதழ் புதுப்பிக்கப்படவே இல்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனால், இப்படிப்பட்ட ஹெலிகாப்டரை தொடர்ந்து ஆந்திர அரசு ஏன் பயன்படுத்தி வந்தது என்ற கேள்வி எழுந்தது.
மேலும், இப்படிப்பட்ட ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருவது குறித்து முதல்வருக்குத் தெரிவிக்காமல் அதிகாரிகள் மறைத்து விட்டனரா அல்லது இதில் பெரும் சதி வேலை எதுவும் மறைந்துள்ளதா என்ற கேள்விகளும் எழுந்தன.
ஆனால் தற்போது டிஜிசிஏ இதை மறுத்துள்ளது. தங்களது இணையதளம் புதுப்பிக்கப்படவில்லை. அதில் உள்ளவை பழைய தகவல்கள். முதல்வர் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் நல்ல நிலையில்தான் இருந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.