ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்-6 பேர் கைது
திருத்தனி: திருத்தினியில் ஆந்திராவுக்கு கடத்த ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்திருந்த கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். சுமார் 185 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவின் எல்லைபகுதியான திருத்தனி நகரின் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் எம்ஜிஆர் தெருவில் உள்ள குடோன் ஒன்றில் ரேஷன் பொருட்கள் பதுங்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அவர்கள் லாரிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்த ரங்கன்(45), குப்பன்(43), சுப்பிரமணி(42), லோகநாதன்(32), சிவா(25), துரைக்கண்ணன் (53) ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.
மேலும், லாரியில் ஏற்றப்பட்டிருந்த சுமார் 185 மூட்டை அரிசிகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த மூட்டை ஆந்திராவுக்கு அனுப்பப்பட இருந்தது தெரிய வந்தது.