For Daily Alerts
Just In
கோபி கோர்ட்டில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆஜர்
கோபிசெட்டிபாளையம்: நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கோபி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நடிகர் ராஜ்குமார் கடத்தலில் பணம் கைமாறியது தொடர்பான வழக்கு கோபி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்பட 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில், முத்துலட்சுமி உள்ளிட்டோடர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராமதிலகம், செப்டம்பர் 17 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
தற்போது மைசூர் கோர்ட்டில் முத்துலட்சுமி அடைக்கப்பட்டுள்ளார். கோபி கோர்ட் விசாரணைக்காக அவர் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டிருந்தார்.
அவரது வருகையையொட்டி கோபி கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Comments
Story first published: Friday, September 4, 2009, 16:16 [IST]