For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்வைன்: புனே, அகமதாபாத்தில் ஒருவர் பலி-இந்தியாவில் 116 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

Swine Flu
புனே: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று புனே மற்றும் அகமதாபாத்தில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 116 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இரவு புனே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தீப் தைனே என்ற 35 வயது வாலிபர் மரணமடைந்தார். இதையடுத்து புனேவில் மட்டும் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் நேற்று இரவு பன்றி காய்ச்சலுக்கு அகமதாபாத்தை சேர்ந்த ஒருவரும் பலியாகியுள்ளார். அவரது பெயர், வயது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து இந்தியாவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இந்தியா முழுவதும் 124 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 50, தமிழகத்தி்ல் 33, மகராஷ்டிராவில் 21 பேருக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரத்து 315 என கூறப்படுகிறது. அதிகபட்சமாக பிரேசிலில் 657, அமெரிக்காவில் 593, அர்ஜென்டினாவில் 465 பேர் பலியாகியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X