கல்வீச்சு-ஓட்டப்பிடாரத்தில் 2 ஆண்டுக்கு பின் சகோதரர்கள் கைது
ஓட்டப்பிடாரம்: அரசு பஸ் மீது கல் வீசிய சகோதரர்கள் இருவரை ஓட்டப்பிடாரம் போலீசார் சுமார் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் கரும்புலி. இவரது மகன்கள் ஜேம்ஸ், ஜான். இவர்கள் இருவர் மீதும் கடந்த 2007ம் ஆண்டு அரசு பஸ் மீது கல்வீசி சேதப்படுத்தியதாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், இவர்கள் இருவரும் போலீசிடம் சிக்காமல் கேரளாவுக்கு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து விளாத்திகுளம் நீதிமன்றம் இவர்கள் இருவர் மீதும் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் உறவினர் வீட்டுக்கு துஷ்டி கேட்டு ஓட்டப்பிடாரத்துக்கு வரும் தகவல் மணியாச்சி டிஎஸ்பி அழகர் ராஜாவுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் இசக்கி, சப்-இன்ஸ்பெக்டர் பால்ஜசக் மற்றும் போலீசார சம்பவ இடத்திற்கு சென்று மேற்கண்ட இருவரையும் கைது செய்தனர்.