For Quick Alerts
For Daily Alerts
Just In
தங்கம் விலை - பவுனுக்கு மேலும் ரூ. 104 உயர்வு
சென்னை: தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. நேற்று சனிக்கிழமை மட்டும் சவரனுக்கு ரூ.104 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.11712 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த 2-ந்தேதி காலையில் 1 பவுன் ரூ.11,344 ஆக இருந்தது. மறுநாள் 3-ந்தேதி காலை 1 பவுன் ரூ.11,520 ஆக அதிகரித்தது. அன்று மாலை ரூ.11,608-யை தொட்டது. வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் அதே நிலை நீடித்தது.
சனிக்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 உயர்ந்தது. காலையில் ஒருகிராம் ரூ.1,464-க்கும், ஒரு பவுன் ரூ.11,712-க்கும் விற்கப்பட்டது.
பார்வெள்ளி விலை ரூ.27,635 ஆகவும், ஒருகிராம் ரூ.29.35 ஆகவும் இருந்தது.
Comments
Story first published: Sunday, September 6, 2009, 10:20 [IST]