செல்போன் மூலம் சொத்து வரி கட்டும் முறை - சென்னையில் அமல்
சென்னை: ஜிஆர்பிஎஸ் வசதியின் மூலம், செல்போன்கள் மூலமே சொத்து வரியைக் கட்டும் புதிய முறை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னணி செல்போன் சேவை நிறுவனமான என்ஜிபே மூலம் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். தங்களது கிரடிட் அல்லது டெபிட் கார்டு மூலம், தங்களது ஜிபிஆர்எஸ் மூலம் இந்த சேவையைப் பெறலாம்.
இந்தியாவிலேயே இந்த வசதியைப் பெறும் முதல் மாநிலம் தமிழகம், முதல் நகரம் சென்னை என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியம் இந்த சேவையை தொடங்கி வைத்தார்.
வசதியைப் பெற...
இந்த செல்போன் சொத்து வரிக் கட்டண முறையைப் பயன்படுத்த 'ngpay' என்று டைப் செய்து அதை 56767 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தால் விவரம் தெரிவிக்கப்படும்.
இது ஒருமுறை பதிவு செய்யக் கூடிய முறையாகும். அதன் பின்னர் நமது சொத்து வரி குறித்த விவரங்களை செல்போனிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம், கட்டணங்களைக் கட்டலாம்.
கட்டணம் செலுத்திய பின்னர் அதற்கான ரசீது, நாம் தெரிவிக்கும் இ மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.