வீட்டுக் கடனுக்கு வட்டி 1% குறைப்பு!
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது.
குறைந்த விலையில் வீடு கட்டுவது, குறைந்த விலை வீடுகளை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சலுகை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையிலான கடனுக்கு ஒரு சதவீத வட்டியை அரசே மானியமாக வழங்கும். இதற்காக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பேர் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வீடு கட்டுவதற்கு மட்டுமின்றி ஏற்கெனவே உள்ள வீட்டை விரிவுபடுத்துவதற்குப் பெறப்படும் கடன்களுக்கும் இந்தச் சலுகை பொறுந்தும்.
இதை தனியார் வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளும் அமலாக்கவுள்ளன.
பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நிவாரணம்:
அதே போல 1984ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கென ரூ. 714.76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.