For Quick Alerts
For Daily Alerts
Just In
பாகிஸ்தானில் தேவாலயத்துக்கு தீ வைப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிருஸ்துவ தேவாலயம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
சாம்பிரியல் என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஸ்துவர் ஒருவர் திருக் குர்ரானை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி அப் பகுதியி்ல் உள்ள தேவாலயத்தை ஒரு கும்பல் தாக்கி தீ வைத்தது. அதில் அந்த ஆலயம் எரிந்து சாம்பலானது.
மேலும் கிருஸ்தவர்களின் வீடுகளையும் அந்த வன்முறைக் கும்பல் அடித்து நொறுக்கியது.
இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த கிருஸ்துவ குடும்பங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வெளியேறிவிட்டன. சம்பவத்தையடுத்து அப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Sunday, September 13, 2009, 12:59 [IST]