மருத்துவமனையில் அமைச்சர் பூங்கோதை சோதனை
நெல்லை: ஆலங்குளம் ஆலடி அருணா அரசு மருத்துவமனையில் அமைச்சர் பூங்கோதை இன்று திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது மொத்த 5 டாக்டர்களில் ஒருவர் மட்டுமே பணிக்கு வந்திருப்பதும், நான்கு டாக்டர்கள் பணிக்கு வராதது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், டாக்டர்கள் சொல்லாமல் கொள்ளாமல் மொத்தமாக விடுமுறை போட்டு விடுவதாகவும் அடிக்கடி புகார் எழுந்து வருகிறது.
இதையடுத்து தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பூங்கோதை, மருத்துவமனைக்கு திடீர் விசிட் செய்தார். அவர் அங்குள்ள நோயாளிகளிடமும், சிகிச்சை பெற வந்த மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவமனையில் உள்ள வருகை பதிவேடினையும் ஆய்வு செய்தார். அப்போது பணியில் ஒரு டாக்டர் மட்டும் இருப்பது தெரிய வந்தது.
மற்ற 4 டாக்டர்களை ஏன் பணிக்கு வரவில்லை என்று கேட்டார். மேலும் அவர்கள் 4 பேர் பற்றிய விபரத்தையும் பணியில் இருந்த டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
கலெக்டரிடம் விளக்கம்...
அப்போது அவர் கூறுகையில்,
இங்கு இருக்கும் நிலையை பார்த்தால் நானே பணி செய்யலாம் போல் உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார்.