For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள 24 அரசு பொது மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதி கொண்டு வரப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழகத்தில் சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

இதற்காக சென்னை அரசு பொது மருத்துவமனை, சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், கரூர், நாமக்கல், அரியலூர், திருவள்ளூர், தர்மபுரி, பெரம்பலூர், நாகப்பட்டிணம், சிவகங்கை, திருவாரூர், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 24 அரசு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தலா ரூ. 15 லட்சம் ஒதுக்கப்பட்டு, டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவுகள் துவக்கப்படும். இதற்காக ரூ.3.6 கோடி வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X