For Daily Alerts
Just In
இலங்கை வந்தார் புதிய அமெரிக்க தூதர் புட்னிஸ்
கொழும்பு: இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதர் பாட்ரிசியா புட்னிஸ் இன்று கொழும்பு வந்தார்.
அவர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அறிமுக கடிதங்களை கொடுத்தார். புட்னிஸ் கடந்த மே 27ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான அமெரிக்க அதிபராக நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனத்தை அமெரிக்க செனட் கடந்த மாதம் 4ம் தேதி அங்கீகரித்தது. இதையடுத்து அவர் கடந்த 19ம் தேதி வாஷிங்கடனில் பதவி ஏற்றார்.
தற்போது தான் முதன் முறையாக கொழும்பு வந்துள்ளார். அவர் இதற்கு முன்னதாக 2004-06 வரை பாகிஸ்தான் துணை தூதராகவும், 2006-07ல் வங்கதேச துணை தூதரகாவும், 2007-09ல் ஈராக்கின் துணை தூதராகவும் இருந்துள்ளார்.
அவர் 1980-82ல் கராச்சி துணை தூதரகத்தின் துணைதூதராகவும், 1985-88ல் டெல்லி துணை தூதரகத்தில் தூதராகவும் இருந்துள்ளார்.
Story first published: Thursday, September 17, 2009, 18:52 [IST]