ஒபாமா கருப்பர் என்பதால் இனவெறி- கார்ட்டர்
84 வயதாகும் கார்ட்டர் இதுகுறித்து என்பிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், அதிபர் ஒபாமாவுக்கு எதிராக சமீப காலமாக எழுந்து வரும் கோபங்கள், விமர்சனங்களுக்குப் பின்னால் இனவெறி இருப்பதாக நான் நினைக்கிறேன்.
ஒபாமா ஒரு கருப்பர் என்பதால், அவர் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்பதால் இந்த துவேஷம் எழுந்திருப்பதாக நான் உணர்கிறேன்.
நான் (அமெரிக்காவின்) தெற்கிலிருந்து வந்தவன். இத்தனை ஆண்டுகளில் தெற்கு பெரும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால் இனவெறி அங்கு இன்னும் மிச்சம் உள்ளது. இங்குள்ள வெள்ளையர்களிடம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்க வெள்ளையர்கள் மத்தியிலும், கருப்பர்களால், ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் நாட்டுக்குத் தலைமை தாங்க முடியாது என்ற நம்பிக்கை மனதுக்குள் ஆழ ஊடுறுவியுள்ளது.
தற்போது ஒபாமா அந்தப் பதவிக்கு வந்துள்ளதை அவர்களால் தாங்க முடியவில்லை. இந்த எண்ணம் இன்னும் மறையாமல் இருப்பது எனக்கு வருத்தம் தருகிறது, கவலையை ஏற்படுத்துகிறது என்றார் கார்ட்டர்.
சில நாட்களுக்கு முன்பு அதிபர் ஒபாமா ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது குடியரசுக் கட்சி எம்.பி. ஜோ வில்சன், நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று சத்தமாக கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல வாஷிங்டனில் ஒபாமா அரசின் கொள்கைகளை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இவர்கள் அனைவருமே வெள்ளை அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜிம்மி கார்ட்டரின் பேச்சு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.