காதலியின் பெற்றோரை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்
ராஜமுந்திரி: தன்னை காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் பெற்றோரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த சீனிவாசன்-சத்யவதி தம்பதியின் மகள் அனுஷா (17). பிளஸ்-2 படித்து வரும் இந்த மாணவியை அண்டை வீட்டில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக அனுஷாவுக்கு தொல்லை தரவே அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ராஜேஷை எச்சரித்து அனுப்பினர்.
இந் நிலையில் மீண்டும் தொலை தொடரவே மீண்டும் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.
இந் நிலையில் நேற்று ஜாமீனில் வந்த ராஜேஷ் இரவில் அனுஷா வீட்டுக்கு சென்று அவரது தந்தை ஸ்ரீனிவாசை கத்தியால் குத்தினான். பின்னர் கழுத்தை அறுத்துவிட்டு அவரது மனைவி சத்யவதியின் கழுத்தையும் அறுத்தான். இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்கனர்.
இதையடுத்து அனுஷாவின் கழுத்திலும் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
படுகாயமடைந்த அனுஷா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.