For Quick Alerts
For Daily Alerts
Just In
மீடியா செய்திகளால் சீனாவுடன் மோதல் வரும் - நாராயணன் கவலை
இதுகுறித்து நாராயணன் கூறுகையில், சீனத் தரப்பிலிருந்து அத்து மீறல்கள் இல்லை என்று நான் கூற மாட்டேன். அதேசமயம் அது அபாயகரமான அளவில் உள்ளதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எந்தவித அதிகரிப்பும் அதில் இல்லை.
இந்தியா மீது அழுத்தத்தை ஏற்படுத்த சீனா முயல்வதாக நான் கருதவில்லை. 1962ம் ஆண்டு இருந்த இந்தியா வேறு, இப்போது உள்ள இந்தியா வேறு. இரு நாடுகளும் எல்லைப் பகுதியில், அமைதியை பராமரிக்க ஆர்வமாக உள்ளன.
மொத்தத்தில் எல்லைப் பகுதியில் சிறு சிறு ஊடுறுவல்கள் இருக்கலாம். ஆனால் அபாயகரமான அளவில் அவை இல்லை என்பதே உண்மை என்றார் நாராயணன்.
Comments
Story first published: Saturday, September 19, 2009, 17:26 [IST]