For Daily Alerts
Just In
முன்னாள் அதிமுக வந்தவாசி எம்.பி. துரை நீக்கம்
சென்னை: வந்தவாசி தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி. எம். துரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கொடநாடு எஸ்ட்டேட்டிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை..
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட துரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.
அவருடன் அதிமுகவினர் எவரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments
Story first published: Monday, September 21, 2009, 13:32 [IST]