For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்வைன்-இந்தியாவில் 257 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இதுவரை 257 பேர் பலியாகியிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 7 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரா, குஜராத்தில் தலா 3 பேரும், ஆந்திராவில் ஒருவரும் இறந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் புனேவில் 2 பேரும், நாக்பூரில் ஒருவரும் இறந்துள்ளனர். குஜராத்தில் காந்திநகர், வதோதரா, சூரத் நகரில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். ஆந்திராவில் இறந்தவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்.

இதுவரை இந்தியா முழுவதும் சுமார் 35 ஆயிரத்து 148 பேருக்கு சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 8 ஆயிரத்து 153 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் மாநில வாரியாக பலியானவர்கள் பட்டியலையும் வெளியி்ட்டுள்ளது.

1. மகாராஷ்டிரா-106

2. கர்நாடகா - 79

3. குஜராத்-26

4. ஆந்திரா - 22

5. டெல்லி - 8

6. கேரளா-4

7. தமிழ்நாடு- 3

8. கோவா-3

9. ஹரியானா-2

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தர்கண்ட், சட்டீஸ்கர் ஆகியவற்றில் தலா ஒருவர் பலியாகி இருப்பதாக அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X