ஸ்வைன்-இந்தியாவில் 257 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் இதுவரை 257 பேர் பலியாகியிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் நேற்று மட்டும் 7 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரா, குஜராத்தில் தலா 3 பேரும், ஆந்திராவில் ஒருவரும் இறந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் புனேவில் 2 பேரும், நாக்பூரில் ஒருவரும் இறந்துள்ளனர். குஜராத்தில் காந்திநகர், வதோதரா, சூரத் நகரில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். ஆந்திராவில் இறந்தவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்.
இதுவரை இந்தியா முழுவதும் சுமார் 35 ஆயிரத்து 148 பேருக்கு சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 8 ஆயிரத்து 153 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் மாநில வாரியாக பலியானவர்கள் பட்டியலையும் வெளியி்ட்டுள்ளது.
1. மகாராஷ்டிரா-106
2. கர்நாடகா - 79
3. குஜராத்-26
4. ஆந்திரா - 22
5. டெல்லி - 8
6. கேரளா-4
7. தமிழ்நாடு- 3
8. கோவா-3
9. ஹரியானா-2
ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தர்கண்ட், சட்டீஸ்கர் ஆகியவற்றில் தலா ஒருவர் பலியாகி இருப்பதாக அறிவித்துள்ளது.