ஒரு மாதத்துக்கு பின் அத்வானி 'யு டர்ன்' ஏன்?-ஜஸ்வந்த்
ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் பேசிய அவர், இதைச் சொல்ல அத்வானி ஏன் ஒரு மாதம் காத்திருந்தார் என்று தெரியவில்லை. அவரது பேச்சை எந்த அளவுக்கு மதிப்பது என்று தெரியவில்லை. அவர் ஏன் திடீரென 'யு டர்ன்' அடித்துள்ளார் என்றும் தெரியவில்லை என்றார்.
ஊசிப் போன ஊறுகாய் விவகாரம்..
இதற்கிடையே அத்வானி ஊசிப் போன ஊறுகாய் போல ஆகி விட்டார். அவரது அரசியல் வாழ்க்கை கிட்டதட்ட முடிந்துவிட்டது என்று கூறிய பாஜக தலைவர் மனோகர் பாரிக்கருக்கு அக் கட்சியே ஆதரவு தெரிவித்துள்ளது.
கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மனோகர் பாரிகர் வரும் டிசம்பரில் ராஜ்நாத் சிங்கின் பதவி காலம் முடிந்தவுடன் அடுத்த பாஜக தலைவராக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். ஆர்எஸ்எஸ் ஆதரவைப் பெற்ற அவர் அந்தப் பதவியைப் பிடிதது விடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அத்வானியை ஊசிப் போன ஊறுகாய் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி,
பாரிக்கரின் பேச்சு மீடியாவால் திரிக்கப்பட்டுவிட்டது. அவர் அத்வானியை ஊறுகாயுடன் மட்டுமல்ல, சச்சின் டெண்டுல்கருடனும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இதில் ஊறுகாய் விஷயத்தை மட்டும் வெளியிட்டுவிட்டு சச்சினுடன் ஒப்பிட்டத்தை விட்டுவிட்டனர்.
அதே நேரத்தில் ஊசிப் போன போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தால் அது தவறு என்றார்.