லஞ்சம்-வீடியோ தடுப்பு பிரிவு எஸ்ஐ மீது வழக்கு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் ரூ. 2500 லஞ்சம் வாங்கிய வீடியோ தடுப்பு பிரிவு எஸ்ஐயை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் வீடியோ தடுப்பு பிரிவு போலீஸார் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து லஞ்ச ஓழிப்பு டிஎஸ்பி மனோகர குமார், இன்ஸ்பெக்டர் எஸ்கால், மாவட்ட ஆய்வு குழு தலைவர் நாராயணன் ஆகியோர் தலைமையில் ஒரு குழு வீடியோ தடுப்பு பிரிவுக்கு அலுவலகத்துக்கு வந்தது.
இவர்கள் வருவதை எப்படியோ தெரிந்து கொண்ட வீடியோ தடுப்பு பிரிவு எஸ்ஐ அன்பழகன் தலைமையிலான போலீசார் ஜீப்பில் வேகமாக கிளம்பி சென்றனர்.
அவர்கள் தப்பிக்க முயல்வதை பார்த்த லஞ்ச ஒழிப்பு படையினர் அவர்களை விடாமல் துரத்தினர். சிவந்திப்பட்டி சாலையில் அவர்களது ஜீப்பை வழிமறி்த்து, சோதனையிட்டனர்.
அப்போது ஜீப்பில் கணக்கில் வராத ரூ. 2,500 மற்றும் 919 சிடிக்களை கைப்பற்றினர். அவர்கள் எஸ்ஐ அன்பழகன், ஏட்டு கணபதி உள்ளிட்ட 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் மூவர் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.