தேர்தல் வெற்றி-அழகிரிக்கு 51 பவுன் தங்க சங்கிலி பரிசு
திண்டுக்கல்: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்களில் தென் மாவட்டங்களில் திமுகவை அபார வெற்றி பெறச்செய்த மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரிக்கு தென் மண்டல திமுக மாவட்ட செயலாளர்கள் சார்பாக 51 பவுன் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி விடுத்துள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் பத்து தொகுதிகளில் ஒன்பதிலும், சட்டசபை இடைத்தேர்தல்களில் கம்பம், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ரனர்.
இந்த வெற்றிக்கு தென் மண்டல அமைப்பு செயலரும், மத்திய ரசாயன அமைச்சருமான அழகிரி தான் காரணம். எனவே, தென் மண்டல மாவட்ட செயலாலர்கள் சார்பில் அவருக்கு 51 பவுன் தங்கச் சங்கிலி வழங்கப்படுகிறது.
இதை காஞ்சிபுரத்தில் நடக்கும் அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்என அறிக்கையில் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.