புறக்கணிக்கவில்லை..ஒதுங்கியிருக்கிறோம்-தேமுதிக
சென்னை: தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சி மன்றப் பதவிகளுக்கான இடைத் தேர்தலில் இருந்து தேமுதிக ஒதுங்கி நிற்பதாக அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 603 பதவிகளுக்கான இடைத் தேர்தல் வரும் அக்டோபர் 7ம் தேதி நடக்கிறது. சமீபத்திய சட்டமன்ற இடைத் தேர்தலை புறக்கணித்த அதிமுக இந்தத் தேர்தலை புறக்கணிக்கவில்லை.
ஆனால், வழக்கமாக எந்தத் தேர்தலையும் புறக்கணிக்காத தேமுதிக உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆங்காங்கே, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் மட்டும் தனிப்பட்ட முறையில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
இந்த உள்ளாட்சி இடைத் தேர்தலை நாங்கள் பெரிதாக கருதவில்லை. மத்திய தேர்தல் ஆணையத்தாலேயே தமிழகத்தில் முறையான தேர்தலை நடத்த முடியவில்லை. இந் நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை எப்படி நடத்தும் என்பது நாம் அறிந்தது தான்.
மேலும் தேர்தலில் போட்டியிட எங்களுக்கு முரசு சின்னம் கிடைக்கவில்லை. இதுவும் போட்டியிடாததற்கு ஒரு காரணம். அதே நேரத்தில் தேர்தலை நாங்கள் புறக்கணிப்பதாகக் கூறுவது தவறு, ஒதுங்கி நிற்கிறோம் என்பதுதான் சரி என்று கூறியுள்ளார்.
புறக்கணிப்புத்தும், ஒதுங்கி நிற்பதற்கும் வித்தியாசம் என்ன என்பதை பண்ருட்டி தான் சொல்ல வேண்டும்.
இதற்கிடையே ராஜபாளையம் நகராட்சி இடைத் தேர்தலை தேமுதிகபுறக்கணிப்பதாக அக் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், சட்டசபை தேர்தலின் போது எங்கள் கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் அதே முரசு சின்னம் கிடைப்பதில் எங்களுக்கு சிக்கல் நிலவுகின்றது. எனவே ராஜபாளையம் நகராட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதில்லை என கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications