தொகுதிப் பக்கமே வராத தென்காசி எம்.பி இன்று அலுவலகம் திறக்கிறார்
தென்காசி: தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ ராமசாமி இன்று திறந்து வைக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லிங்கம் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து சுமார் 4 மாதம் வேகமாக ஓடிவிட்ட நிலையில் அவர் இதுவரை தொகுதி பக்கம் நன்றி சொல்ல கூட எட்டிபார்க்கவில்லை.
மேலும் அவர் தென்காசியில் மக்கள் தொடர்பு அலுவலகம், தென்காசி, கடையநல்லூர் சட்டசபை தொகுதி பணிகளின் போதும் அந்த பக்கம் வரவில்லை என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந் நிலையில் தற்போது ஒரு வழியாக அவர் தென்காசிக்கு வர முடிவு செய்துள்ளார். வீட்டு வசதி வாரிய குடியிறுப்பில் இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அலுவலகம் நாளை திறக்கப்படுகிறது. இந்த விழாவுக்கு அவர் வருகிறார்.
இந்த அலுவலகத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை உறுப்பினர் ராமசாமி திறந்து வைக்கிறார். ஆனால், வாசுதேவநல்லூர் மதிமுக எம்எல்ஏ, ராஜபாளையம் மற்றும் சங்கரன்கோவில் அதி்முக எம்எல்ஏ ஆகியோரின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.