For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெர்மன் தேர்தல்-அதிபர் ஏஞ்செலா மாபெரும் வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

Angela Merkel
பெர்லின்: ஜெர்மனியில் நடந்த பொதுத் தேர்தலில் அந் நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கெல் தலைமையிலான கிருஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதே நேரத்தில் அக் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த இடதுசாரி கட்சி கூட்டணியான சோஷியல் டெமாக்ரடிக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளன.
இதையடுத்து அந்தக் கட்சியின் ஆதரவை விட்டுவிட்டு வலதுசாரிக் கட்சியான 'ப்ரீ டெமாக்ரேட்ஸ்' கட்சியுடன் இணைந்து அடுத்த ஆட்சியை அமைக்கவுள்ளார் மெர்கெல்.

இடதுசாரிக் கட்சிகளுன் கூட்டணி அமைத்ததால் பொருளாதார தாராளமயமாக்கல் விவகாரங்களில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் கடந்த 4 ஆண்டுகளாக தவித்து வந்தார் மெர்கெல்.

இப்போது இந்தக் கட்சிகள் தோற்று, தாராளமய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட 'ப்ரீ டெமாக்ரேட்ஸ்' கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளதால் அவர்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் மெர்கெல்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியில் இடதுசாரிக் கட்சிகளுக்கு மாபெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

மெர்கெல் அடுத்து அமைக்கும் கூட்டணி ஆட்சியில் 'ப்ரீ டெமாக்ரேட்ஸ்' கட்சியின் தலைவரான குய்டோ வெஸ்டர்வெல்லி வெளியுறவு அமைச்சராவார் என்று தெரிகிறது.

தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் மெர்கெலின் கட்சிக்கு 33.5 சதவீதமும், 'ப்ரீ டெமாக்ரேட்ஸ்' கட்சிக்கு 15 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.

இடதுசாரிக் கட்சியான சோஷியல் டெமாக்ரடிக் கட்சிக்கு 22.5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் இல்லாத அளவுக்கு ஜெர்மனி இப்போது பொருளாதார மந்த நிலையில் சிக்கியுள்ளது. இதிலிருந்து நாட்டைக் காக்க தாராளமயமாக்கல் கொள்கை கொண்ட மெர்கெல்-ப்ரீ டெமாக்ரேட்ஸ்' கூட்டணியால் தான் முடியும் என அந் நாட்டு கருதுவது இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அல்-கொய்தாவின் கடும் மிரட்டல்களுக்கு இடையே நேற்று அங்கு தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X