For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழம்: நூற்றாண்டின் மோசமான மனித உரிமை மீறல்-கிருஷ்ணசாமி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத்தில் மூன்று லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் முடக்கப்பட்டிருப்பது இந்த நூற்றாண்டின் பயங்கரமான மனித உரிமை மீறல் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கை:

வன்னியில் கடந்த 5 மாதங்களாக 3 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் சித்ரவதை பட்டு கிடக்கின்றனர். நல்ல உணவு, குடிநீர், உடை, உறையுள் இல்லாமல் இலங்கை ராணுவத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இது இந்த நூற்றாண்டின் மோசமான இந்த மனித உரிமை மீறல்.

2ம் தேதி டெல்லியில் பேரணி...

இதை கண்டித்தும், கம்பி வேலிக்குள் முடங்கி கிடக்கும் 3 லட்சம் தமிழர்களையும் அவரவர் இருப்பிடங்களுக்கு செல்ல இலங்கை அரசு அனுமதிக்க இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வரும் 02.10.09 அன்று தேதி டெல்லியில் பேரணி நடைபெறுகிறது.

அதில் தமிழகம் முழுவதையும் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். அவர்கள் நாளை 30.09.09 அன்று சென்னையில் இருந்து டெல்லி புறப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X