For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விபச்சாரம்-குமரி லாட்ஜில் 4 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் லாட்ஜ் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் ஒரு லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பால்துரை தலைமையில் போலீஸார் ஒரு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்த பெண்கள் இருவரும் ஈத்தாமொழியை சேர்ந்த கலா, பேச்சிபாறையை சேர்ந்த ஜெயா என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட கரூரை சேர்ந்த சரவணனையும், விபச்சாரம் செய்ய அறை கொடுத்த லாட்ஜ் மேலாளர் நெல்லையை மீனாட்சிபுரம் மகேந்திரன் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X