For Quick Alerts
For Daily Alerts
Just In
கோவில் நுழைவு போராட்டத்தில் மோதல்: பெண் எம்எல்ஏ கைது
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் கோவில் நுழைவு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ லதா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருக்கோவிலூரில் உள்ள திரெளபதி அம்மன் கோவிலில் அனைத்து சமூகத்தினரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரி கோவில் நுழைவு போராட்டம் நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
ஆனால், ஊர்வலமாக வந்த இவர்களை கோவிலுக்கு 2 கி.மீ. தூரத்துக்கு முன்னே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்
பின்னர் எம்.எல்.ஏ. லதா உட்பட பலரையும் கைது செய்தனர்.
Comments
Story first published: Wednesday, September 30, 2009, 13:34 [IST]