For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2.47 கோடி ஏழைகளுக்கு ஆயுள் காப்பீடு-எல்ஐசி தகவல்

Google Oneindia Tamil News

நெல்லை: எல்ஐசியின் ஜன ஸ்ரீ பீமா யோஜனா திட்டம் மூலம் நாடு முழுவதும் சுமார் 2.47 கோடி ஏழைகள் பயனடைவார்கள் என எல்ஜசி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எஸ்ஐசியின் சார்பில் அக்டோபர் மாதம் சமூக பாதுகாப்பு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நெல்லை கோட்ட எல்ஐசி அலுவலகத்தில் நடந்த இதற்கான தொடக்க விழாவில் கோட்ட முதுநிலை மேலாளர் சுப்பிரமணியன் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் ஜன ஸ்ரீ பீமா யோஜனா திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தில் பாலிசிதாரர் ரூ. 200 பிரிமியம் செலுத்த வேண்டும். அதில் பாதியை எல்ஐசி செலுத்தி விடுகிறது. பாலிசிதாரர் ரூ.100ஐ செலுத்தினால் போதுமானது.

இயற்கையான முறையில் இறப்பவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரூ.30 ஆயிரமும், விபத்து நேர்ந்தால் ரூ.75 ஆயிரமும், வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 2.47 கோடி பேருக்கு ஆயுள் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது பாலிதாரர்களின் குழந்தைகள் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும்போது மாதத்திற்கு ரூ.100 வீதம் ஒரு ஆண்டிற்கு ரூ.1,200 கல்வி உதவி தொகையும் அளிக்கப்படுகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X