For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை அருகே பஸ், லாரி மோதல்-2 பேர் பலி

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியில் அரசு பேருந்தும், லாரியம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் பலியானார்கள்.

மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று அதிகாலை ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதை மதுரை எழில் நகரை சேர்ந்த பத்மநாபன் என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.

இந்நிலையில் பஸ் அதிகாலை 3 மணி்க்கு கங்கைகொண்டான் அருகே தனியார் எடை மேடைக்கு பக்கத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் ஜல்லி கற்களை ஏற்றிய லாரி மெயின் ரோட்டை நோக்கி திரும்பியது.

திடீரென்று லாரி வந்ததை அடுத்து பேருந்து, லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

டிரைவர் சுப்பிரமணியன் மற்றும் அவருக்கு பின்னால் இருந்த மதுரை ஜெய்ஹிந்த் புரம் பேச்சிமுத்து ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் பேச்சி முத்து அங்கேயே இறந்தார்.

பஸ் நிலை தடுமாறி சிறிது தூரம் டிரைவர் இல்லாமல் ஓடி சென்று கவிழ்ந்தது. இதில் விருதுநகர் மாவட்டம் வெள்ளூரை சேர்ந்த சவேரியர் என்பவரின் 1 வயது குழந்தை ஏஞ்சலின் இறந்தது.

காயம் அடைந்த பாளையங்கோட்டை டிவிஎஸ் நகர் ராஜேந்திரன் மனைவி சரஸ்வதி, தவசியம்மாள் ஆகிய 2 பேர் கவலைகிடமான நிலையில் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X