இனவெறித் தாக்குதல் நடத்திய 2 ஆஸ்திரேலியர்களை அடித்து உதைத்த இந்தியர்கள்
மெல்போர்ன் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எப்பிங் என்ற இடத்தில் உள்ள மெடோகிளோன் என்ற தடகள ஸ்டேடியத்திற்கு வெளியே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இது நடந்தது.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியர் ஒருவரின் கார் கண்கணாடியை ஒரு உள்ளூர்வாசி உடைத்து விட்டார். மேலும் ஸ்டேடியத்தில் நடந்த கபடிப் போட்டியைப் பார்க்க வந்து கொண்டிருந்த சில இந்தியர்களைப் பார்த்தும் மோசமாக கமெண்ட் அடித்தார்.
இதையடுத்து இந்தியர்கள் ஒன்று சேர்ந்தனர். இந்தியர்களை அவதூறாகப் பேசிய ஆஸ்திரேலியரையும், அவருக்கு உதவியாக வந்த இன்னொரு ஆஸ்திரேலியரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். குச்சிகளாலும் தாக்கினர். இதில் அந்த இரண்டு ஆஸ்திரேலியர்களும் காயமடைந்தனர்.
காயமடைந்த இவருவருக்கும் 25 மற்றும் 42 வயதாகிறது. இருவரும் நார்த்தர்ன் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மேலும், காயமடைந்த இருவரும் இதுவரை புகார் ஏதும் கொடுக்க முன்வரவில்லையாம்.