For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உகாண்டாவில் பிடிபட்ட சோமாலிய அமைச்சர்!

Google Oneindia Tamil News

Yusuf Mohamed Siad
மொகடிஸூ: சோமாலிய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் யூசுப் முகம்மத் சியாத், உகாண்டா நாட்டில் வைத்து கடத்தப்பட்டார்.

ஆனால், அவரை தங்களது படைகள் பிடித்து வைத்துள்ளதாக உகாண்டா ராணுவம் அறிவித்துள்ளது.

சோமாலியாவை பல்வேறு ஆயுதம் தாங்கிய கும்பல்கள் கூறுபோட்டு வைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்தி வருகின்றன.

அந்த கும்பல்களிலேயே பெரிய கும்பலான அல்-சபாப் என்ற அமைப்பு தான் ஆட்சியில் உள்ளது. இதன் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்கள் அனைவருமே முன்னாள் ஆயுதப் போராட்டக்காரர்கள் தான்.

அந்த வகையில் முன்னாள் போராளியான யூசுப் சியாத், அந் நாட்டு பாதுகாப்புத்துறை இணையமைச்சராக உள்ளார்.

அவர் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார். பின்னர் மசூதிக்குச் செனறு தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தபோது அவரை ஒரு ஆயுதம் தாங்கிய கும்பல் கடத்திச் சென்றதாக சோமாலிய அரசு தெரிவி்த்துள்ளது.

சொல்லாம கொள்ளாம வந்தா...?:

ஆனால், அவரை யாரும் கடத்தவி்ல்லை என்றும், உகாண்டா அரசுக்குத் தெரியாமல் அவர் நாட்டுக்குள் நுழைந்ததால் தான் அவரை எங்கள் ராணுவம் பிடித்து வைத்துள்ளது என்று உகாண்டா அரசு கூறியுள்ளது.

அவரது ரகசிய வருகையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எதற்காக வந்தார் என்பதை விசாரிக்கவே அவரை பிடித்து வைத்துள்ளோம் என்று கூறியுள்ளது உகாண்டா.

நீங்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அடுத்த நாட்டுக்குள் எப்படி சொல்லாமல் நுழையலாம் என்றும் அந்நாடு கேள்வி எழுப்பியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X