நியூசிலாந்தில் அடுத்தடுத்து 4 பூகம்பம்- சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ்
வெல்லிங்டன்: நியூசிலாந்தின் தெற்கு பியோர்ட் லான்ட் பகுதியில் அடுத்தடுத்து நான்கு பூகம்பங்கள் தாக்கின. இதையடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
புதன்கிழமை இரவு அங்கு அடுத்தடுத்து 2 முறை பூகம்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று மேலும் நான்கு பூகம்பங்கள் தாக்கின. இதில் அதிகபட்சமாக 7.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளிட்ட 11 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் பின்னர் இது விலக்கிக் கொள்ளப்பட்டது. முதலில் இது 7.8 ரிக்டர் என்று கூறப்பட்டது. இதனால் பெரும் பீதி ஏற்பட்டது. ஆனால் அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் 7.6 ரிக்டர் அளவிலேயே பூகம்பம் இருந்ததாக அறிவித்தது.
அப்பகுதியில் தொடர்ந்து நில அதிர்வுகள் காணப்படுகின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் இல்லை.