For Daily Alerts
Just In
மாயாவதி அரசின் பூங்கா, நினைவிடங்கள் - கட்டுமானத்திற்குத் தடை
டெல்லி: உ.பி. மாநிலம் நொய்டாவில், முதல்வர் மாயாவதி, அம்பேத்கர், கன்ஷிராம் உள்ளிட்டோரின் சிலைகள், பூங்காக்கள், நினைவிடங்களின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது, நிறுவக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வந்த உச்சநீதி்மன்ற பெஞ்ச், இன்று பிறப்பித்த உத்தரவில், உ.பி. முதல்வர், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம், அம்பேத்கர் ஆகியோரது சிலைகளை நிறுவுவது, நினைவிடங்கள், பூங்காக்கள் அமைப்பது ஆகியவை தொடர்பான கட்டுமானப் பணிகளை உ.பி. அரசு மேற்கொள்ளக் கூடாது.
அதேசமயம், இந்தத் திட்டங்கள் தொடர்பான பிற பணிகளை மேற்கொள்ளத் தடை இல்லை என்று அறிவித்தனர்.
மேலும், வழக்கு விசாரணை அக்டோபர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Comments
Story first published: Friday, October 9, 2009, 17:07 [IST]