For Daily Alerts
Just In
ராமலிங்க ராஜுவின் ஜாமீன் மனு தள்ளுபடி
ஹைதராபாத்: சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவின் ஜாமீன் மனுவை ஹைதராபாத் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன மோசடி தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜு. இந்த நிலையில், அவர் 4வது கூடுதல் பெருநகர செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஈஸ்வர் ராவ், ராஜு மீதான சிபிஐ வழக்கு இன்னும் முடியவில்லை. எனவே ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினார்.
தற்போது இருதயப் பிரச்சினை காரணமாக ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ராமலிங்க ராஜு. உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, October 10, 2009, 15:12 [IST]