முகேஷனுடன் சமாதானமாகப் போக அனில் அம்பானி விருப்பம்
முகேஷ் - அனில் இடையிலான மோதல் உலகறிந்த விஷயம். இரு சகோதர தொழிலதிபர்களுக்கும் இடையில் நிலவும் பூசலால் இந்தியத் தொழில்துறையில் தொடர்ந்து பரபரப்பாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென முகேஷுடன் சமாதானமாகப் போக விரும்புவதாக அனில் கூறியுள்ளார்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இதயப்பூர்வமான முறையில், ஆக்கப்பூர்வமான முறையில், தீர்வு காண முடியும். இதற்கு முகேஷ் முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இரு தரப்பும் அமைதிக்கு முன்வந்தால் நிச்சயம் சில வாரங்களி்ல் இதை சாதிக்க முடியும்.
அண்ணன் முகேஷ் நினைத்தால் நிச்சயம் இதை சாதிக்க முடியும். இப்போது காலம் கடந்து விட்டாலும் கூட நமக்குள் இருக்கும் அனைத்து கருத்து வேறுபாடுகளையும், பிரச்சினைகளையும் சரி செய்து விட முடியும் என நம்புகிறேன்.
பிரச்சினைகள் சிலதான். அதைப் பேசித் தீர்க்க முடியும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் அனில்.
அனில் காட்டியுள்ள இந்த வெள்ளைக் கொடிக்கு இதுவரை முகேஷ் தரப்பிலிருந்து பதில் இல்லை.