For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட்டில் நக்சல் பந்த்-தண்டவாளம் எரிப்பு

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் பந்த் நடத்த மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து அங்கு இன்று காலை வன்முறை வெடித்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 இடங்களில் ரயில்வே தண்டவாங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஒரு பாலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பெரும் படை பலத்தை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து இந்த பந்த்துக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் கிரிடித் மாவட்டம், இஸ்ரி என்ற பகுதிக்கு வந்த 12 ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள், அங்கிருந்த தண்டவாளத்தின் 3 பகுதிகளில் தீவைத்து எரித்தனர். இதனால் தண்டவாளத்தின் ஸ்லிப்பர் கட்டைகள் எரிந்து நாசமாகின. மேலும், தும்ரி- கிரிடித் சாலையிலும் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.

இதுதவிர தும்ரி - கிரான்ட் டிரங்க் சாலையை இணைக்கும் சாலைப் பாலத்தையும் அவர்கள் தகர்த்தனர். வெடிகுண்டுகளை வைத்து இந்தப் பாலத்தை அவர்கள் இடித்தனர்.

ரயில் தண்டவாளம் எரிக்கப்பட்டதால், சக்திபூஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X