இலங்கை தூதரக தாக்குதல்: டெல்லி போலீஸ் வருகை-முன் ஜாமீன் கோரும் கிருஷ்ணசாமி
அதே போல டெல்லி போலீசார் தன்னையும் கைது செய்வார்கள் என்று கருதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி அக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மனு செய்துள்ளார்.
இதை அவசர மனுவாகக் கருதி விசாரிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
டெல்லியில் அக்டோபர் 2ம் தேதி புதிய தமிழகம் கட்சியினர் இலங்கையைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென இலங்கைத் தூதரகத்திற்குள் புகுந்த சிலர் அங்கு தாக்குதலில் இறங்கினர். போலீஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லாததால் தூதரக வளாகத்திற்குள் இருந்த பூத்தொட்டிகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
இந்த சம்பவத்தால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்தது. இந்திய அரசும் உடனடியாக வருத்தம் தெரிவித்துக் கொண்டது.
இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஜகத் சிங் தலைமையிலான குழு திருச்சி வந்துள்ளது.
சென்னை போலீஸார் கொடுத்த தகவலின் பேரில் இவர்கள் திருச்சிக்கு வந்துள்ளனராம். தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் குணசேகரனை டெல்லி போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவர் திருச்சியில் வசிப்பதாக தமிழக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஒருவர் டெல்லி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் வந்துள்ளனராம்.
உறையூர் அரசு மருத்துவமனையில் குணசேகரன் வேலை பார்ப்பதாக சென்னை போலீஸார், டெல்லி போலீஸாருக்குத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து திருச்சி வந்துள்ள டெல்லி போலீஸார், அவரைக் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில் தான் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் கிருஷ்ணசாமி.