For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரோடா, தேனா, ஓரியண்டல் வங்கிகளில் அரசு பங்கு அதிகரிப்பு

Google Oneindia Tamil News

Bank Of Baroda
சென்னை: பரோடா வங்கி, தேனா வங்கி மற்றும் ஓரியண்டல் வங்கி ஆகியவற்றில் தனது பங்கை 10 சதவிகித அளவுக்கு அதிகரிக்கிறது அரசு.

இந்த வங்கிகளின் முன்னுரிமைப் பங்குகளில் 10 சதவிகிதத்தை அரசு வசமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமீபத்தில் அனைத்து அரசுத் துறை வங்கிகளுடனும் மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தியது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த வங்கிகளுக்குத் தேவையான மூலதனத் தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதில் பரோடா வங்கிக்கு ரூ.6000 கோடியும், தேனா மற்றும் ஓரியண்டல் வங்கிகளுக்கு தலா ரூ.1000 கோடியும் தேவைப்படும் என்று கூறப்பட்டது.

இந்த அளவு மூலதனத்தை வங்கிகளில் அரசு செலுத்தினால், அந்த அளவு அரசின் பங்கு முதல் அளவும் உயர்த்தப்பட வேண்டும்.

எனவே இந்த மூன்று வங்கிகளிலும் அரசின் பங்கு அளவு மேலும் 10 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது.

பரோடா வங்கியில் அரசின் பங்கு 54 சதவிகிதமாக உள்ளது. அதனை 64 சதவிகிதமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேனா மற்றும் ஓரியண்டல் வங்கியில் உள்ள 51 சதவிகித முதலீட்டு அளவை 61 சதவிகிதமாக்க முடிவு செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X