For Daily Alerts
Just In
நேபாள துணை பிரதமரான சுஜாதா கொய்ராலா
இவர் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஆவார். இவர் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் மகள் சுஜாதா என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் ராம் பரண் யாதவ் முன்னிலையில் சுஜாதாவுக்கு பிரதமர் மாதவ் குமார் நேபாள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தற்போதுள்ள 22 கட்சி கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பிரசண்டா தலைமையிலான மாவோயிஸ்ட் கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், நேபாள காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறாமல் தடுக்கவே சுஜாதாவுக்கு இந்தப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது..
Story first published: Tuesday, October 13, 2009, 10:48 [IST]