15 நாளில் 58,000 பேர் மறுகுடியேற்றம்?: தெரியாது என்கிறது இலங்கை!
கொழும்பு: 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்களை மறுகுடியேற்றம் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன் யாபா கூறியுள்ளார்.
இலங்கை சென்று திரும்பிய திமுக - காங்கிரஸ் குழு தமிழகம் திரும்பியதும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தங்களது அறிக்கையைக் கொடுத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி, 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை வியாழக்கிழமை முதல் மேற்கொள்ளப் போவதாக இலங்கைத் தரப்பு தெரிவித்துள்ளதாகவும், மற்றவர்கள் படிப்படியாக மறு குடியமர்த்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று அமைச்சர் யாபாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. அரசின் கொள்கைப்படி, தமிழர்கள் கெளரவத்துடன் மறுகுடியமர்த்தப்படுவர் என்று மட்டும் தெரிவித்தார்.