For Daily Alerts
Just In
மதுரை கோயில் முன் 'குடல் மாலையுடன்' பிணம்!
மதுரை: மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலின் சொக்கவாசல் பாதை அருகில் ஆண் பிணம் கிடந்தததால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் பிணம், குடல்கள் கிழிக்கப்பட்டு கழுத்தில் மாலையாக சுற்றப்பட்ட நிலையில் கோயில் வாசலில் போடப்பட்டிருந்தது.
அவர் கொலை செய்யப்பட்டு 2,3 நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும், குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டு நேற்று நள்ளிரவில் கோயில் வாசலில் போடப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இறந்தவர் யார் என்று தெரியவில்லை. கோவில் முன் கொடூரமான முறையில் பிணம் கிடந்ததால் பக்தர்களும் பொது மக்களும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Comments
Story first published: Friday, October 16, 2009, 11:01 [IST]