சத்யம் நிறுவனத்தில் 6500 பேர் பணி நீக்கம்!
சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் ரூ.7800 கோடி மோசடியால் பெரும் சரிவுக்குள்ளான சத்யம் இப்போது மகிந்திரா நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் 40 ஆயிரம் ஊழியர்கள் இருந்தனர். சத்யம் சரிவுக்குப் பின்னர் படிப்படியாக 30 ஆயிரமாகக் குறைந்துவிட்டது ஊழியர் எண்ணிக்கை.
மகிந்திரா நிறுவனத்தின் கைக்கு நிர்வாகம் மாறியபோது, யாரையும் வேலையை விட்டு நீக்க மாட்டோம் என அறிவித்தனர். ஆனால் அடுத்த சில தினங்களில் 8000 பேரை கட்டாய விடுப்பில் அனுப்பினர்.
குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இவர்களில் 1500 பேரை மட்டும் திருப்பி அழைத்துக் கொண்ட நிர்வாகம், மீதியுள்ள 6500 பேருக்கு நோட்டீஸ் ஒன்றை இமெயில் மூலம் அனுப்பியுள்ளது.
அதில் 'உங்களை பணியில் தொடர வைக்க முடியாது. டிசம்பர் 18-ந் தேதிக்குள் உங்கள் கணக்குகளை முடித்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள்' என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த சத்யம் நிர்வாகம், இவர்களை இப்போதைக்கு தற்காலிகமாகவே வேலையிலிருந்து நீக்கியுள்ளோம். ஆனாலும் அவுட்சோர்ஸிங் முறையில் இவர்களுக்கு மாற்று வாய்ப்புகள் அளிக்க முயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளது.
ஒரே நேரத்தில் பணியிழந்த 6500 பேரும் பெரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். மாற்று வேலைகளுக்கும் முயர்சித்து வருகின்றனர்.