3 நாள் வீழ்ச்சிக்குப் பின் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை
தொடர்ந்து மூன்று தினங்கள் வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தை இன்று 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் தொடங்கியது.
ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான வர்த்தகம் காரணமாக இந்த முன்னேற்றம் என்று கூறப்படுகிறது.
பிற்பகலுக்குப் பிறகு சென்செக்ஸில் ஏறிய புள்ளிகள் மீண்டும் இறங்கத் துவங்கின.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 37 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
சென்செக்ஸ் பங்குகளில் டிஎல்ப் 2.5 சதவிகித லாபத்தில் கைமாறியது. ஹிண்டால்கோ பங்குகள் 2 சதவிகித லாபத்தில் விற்கப்பட்டன.
விப்ரோ, எச்டிஎப்சி, மகிந்திரா அண்ட் மகிந்திரா, டாடா பவர், விப்ரோ போன்றவற்றின் பங்குகள் ஓரளவு லாபம் பார்த்தன. மூலதனப் பொருள் உற்பத்தித் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைப் பங்ககுகளும் இன்று நல்ல விலைக்கு கைமாறி வருகின்றன.
இன்றைய வர்த்தகத்தில் பெருமளவு இழப்பு ஏற்பட்டது லார்சன் அண்ட் டூப்ரோ பங்குகளில்தான்.
அதேபோல கடந்த மூன்று நாட்களாக பெரும் சரிவைச் சந்தித்து வரும் வங்கித் துறைப் பங்குகள் இன்றும் பெரிய முன்னேற்றம் காணாமல் பின்தங்கின. இங்கு கரடியின் பிடி இன்னும் தொடர்கிறது.