சென்னை மருத்துவமனையில் வாசிம் அக்ரம் மனைவி மரணம்
செப்ஸிஸ் என்ற அபாயகரமான பாதிப்பு ஹூமாவுக்கு ஏற்பட்டது. இது ரத்தத்தை கிட்டத்தட்ட விஷமாக்கி விடும். இதன் காரணமாக உடலின் முக்கிய உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விடும். இதனால் ஹூமாவின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூருக்குக் கொண்டு சென்றனர்.
அப்போது சென்னைக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஹூமாவின் உடல் நிலை மோசமடைந்தது.
இதையடுத்து சென்னையில் விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. இந்திய அரசு உடனடியாக அனுமதி அளித்ததைத் தொடர்ந்து ஹூமா சென்னையில் தரையிறக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் கடந்த ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். நினைவு திரும்பாத நிலையியிலேயே அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை 9.45 மணிக்கு ஹூமா மரணமடைந்தார்.
ஹூமாவின் உடலை பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.